Tuesday 14 February 2017

ரயில் பயணியின் அறிமுகம்

அன்பு நண்பர்களே,
     வணக்கம்…..
     முதலாவதாக அனைவருக்கும் மனமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்... இந்த பொன்னான நன்னாளில் இந்த  வலைதளம் மூலமாக தங்களை சந்திப்பதில் நிறைந்த மகிழ்ச்சி!!!
கடல் போன்ற வலைதள உலகில் ஒரு சிற்றாறாய் இன்று நானும் கலக்கிறேன். தளம் ஆரம்பிக்கும் எண்ணம் என்னுள் நீண்ட நாட்களாகவே இருக்கும் ஆசை தான். ஆனால், பலர் கலக்கிக்கொண்டு இருக்கும் இந்த வலை உலகில் என்னால் ஒரு தளத்தை சிறப்பாக நடத்த முடியுமா என்று பல யோசனைகள் என்னுள்..
     நம்மல பொருத்தவரை ஒரு வேலைய செஞ்சா நல்லா செய்யனும் இல்லனா செய்யக் கூடாது… அதான் ஒரு வழியா மனச தைரியப்படுத்திக்கிட்டு என் குலதெய்வத்த வேண்டிக்கிட்டு களத்துல இறங்கிட்டேன்.. காப்பத்து தாயீ…..
     பொதுவா என்னுடைய எண்ணம் எப்போதுமே இயற்கையை நேசிப்பதிலும், பயணம் செய்வதிலும் நிலைத்திருக்கும். வீட்டுக்கு தெரியாம எங்கயாவது சுத்திட்டு வந்துருவேன். உணவுக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணுல பிறந்ததாலோ என்னவோ சாப்பாடு மேலயும் அலாதி பிரியம் நமக்கு. அதனால் இவை பற்றிய பதிவுகள் இந்த தளத்தில் பெரும்பாலும் எதிர்பார்க்கலாம்.
     எத்தனையோ பிளாக்குகளை படிக்கும்போது எப்படி எல்லாம் பின்றாங்களேனு ஆச்சரியமா இருக்கும். சிலர் அதில் எனக்கு தூண்டுதலாகவும் இருக்கின்றனர். என்னால் முடிந்த அளவு என்னுடைய அனுபவங்களை எனக்கு தெரிந்த வகையில் இந்த ரயில் பயணத்தில் தங்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். பிழை இருப்பின் எடுத்துகூறி திருத்துங்கள். நல்லவை ஏதேனும் இருப்பின் தட்டிக்கொடுங்கள்.
     
     பயணிப்போமா……..

பிரியமுடன்
ராஜ்கண்ணன்