Saturday 5 August 2017

குழந்தைப் பருவப் பாடல்

வாழ்வில் ஒரு சமயம் சலிப்புறும்போது குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றியிருக்கலாம். கவலையே அறியாத பருவம் அல்லவா அது!! எவ்வளவு பெரிய விசயத்தையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.  அப்படி சிறு வயதில் விளையாட்டுத்தனமாக நாங்கள் பாடிய பாடல் ஒன்றை இங்கே பகிர்கிறேன்.


"இரண்டு மனம் வேண்டும்... 
 இறைவனிடம் கேட்டேன்..
 நினைத்து வாழ ஒன்று.. 
 மறந்து வாழ ஒன்று..." 

என்று நடிகர் திலகம் காதல் தோல்வியில் பாடும் பாடல் அனைவரும் கேட்டிருப்போம்.  கேட்போர் மனதை உருகச் செய்யும் சோகமயமான பாடல் அல்லவா அது? கவியரசு கண்ணதாசன் அதை அற்புமாக எழுதியிருப்பார். ஆனால் அந்தப் பாடலை நாங்கள் பாடிய விதத்தைக் கண்ணதாசன் கேட்டால் என்ன செய்திருப்பாரோ, தெரியவில்லை. அந்தப் பாடல் கீழே..


"இரண்டு இட்லி வேண்டும்.. 
 சர்வரிடம் கேட்டேன்..
 சட்னியோடு ஒன்று.. 
 சாம்பாரோடு ஒன்று..

அரிசியின் தண்டனை மாவு வழி..
 மாவின் தண்டனை இட்லி வழி..
 இட்லியின் தண்டனை வயித்து வலிலிலிலி....
 சர்வரை தண்டிக்க என்ன வழி???" 

இவ்வாறு பாடிக்கொண்டிருப்போம். இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 

3 comments: